முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள  முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். மன்னர் கல்லூரி ஆங்கில பேராசியர் அய்யாவு, டாக்டர் சலீம், தலைமை ஆசிரியர்கள் (வயலோகம்) ஜெயராஜ், (இலுப்பூர்) ஜான்பிரிட்டோ, டாக்டர் அமாணுல்லா, அதாய் அரப்பிக்கல்லூரி முதல்வர் இம்ரான்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக பள்ளியில் நடைபெற்ற பல்வேறு  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர்.

பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில்  சாகுல்அமீது, காதர்மெய்தீன், சாதிக்பாட்சா, முகமதுகனி, முபாரக், மீரான், சாமிக்கண்ணு, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.