பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரியலூரில் அதிமுக சார்பில் மௌன ஊர்வலம்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரியலூரில் அதிமுக சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொரடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மௌன ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகர செயலாளர் ஏ.பி.செந்தில், ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலசுப்ரமணியன், நல்லாம்பத்தை செல்வராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் ஓ.பி.சங்கர், ஜீவா, அரங்கநாதன், வக்கீல் எஸ்.வி.சாந்தி, மாவட்ட ஊராட்சி குழு  தலைவர் சந்திரசேகர், எருத்துக்காரன்பட்டி காந்தி, சத்யா நகர் கோவிந்தசாமி, மாவட்ட தலைமையக நிர்வாகிகள் திருமூர்த்தி, துரைசாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.