புளியங்குடி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா இருசக்கர மிதிவண்டி வழங்கும் விழா

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க விலையில்லா இருசக்கர மிதிவண்டி வழங்கும் விழா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.சதன் திருமலை குமார் தலைமையில், புளியங்குடி நகரமன்ற துணைத் தலைவர் திமுக நகர செயலாளர் ஆ.அந்தோணிசாமி முன்னிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 112 விலையில்லா இருசக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் பி.வி.பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஷாஜகான் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பீட்டர் என்ற டேனியல், செல்வி, மூகாம்பிகா, மணிகண்டன், குருபாக்கியம், ஜெயக்குமாரி, மாரியம்மாள், செல்வகுமார், பரமசிவன், முருகாம்பிகை, கண்ணன், வேல்ராஜ், ரெபேகா சுமினா ராணி, முகைதீன் பாத்து, தனசேகரன், சௌந்தர்ராஜன், சங்கர் சீனிவாசன், இந்திரா, ஜானகிராமன், பார்வதி, அந்தோணிராஜ், செஸ்லின், ஜெகதீசன், ராஜபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி, வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருளும்  வழங்கி விழாவை சிறப்பித்தனர்.