புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா       

புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா  மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன் தலைமை வகித்தார். பள்ளியின் சென்டர் ஹெட் தேவி கீர்த்தனா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்தார். பின்னர் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஒலிம்பிக்  தீபம் ஏற்றி மழலையரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். யோகா, ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன்  கலந்து கொண்டு தங்களது  திறமைகளை வெளிப் படுத்தினார்கள்.

மேலும் பெற்றோர்களுக்கான  பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசு, நற்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். நிகழ்வில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, இந்திய மருத்துவ சங்கத்தின் நிதிச்செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள்,   யூரோ கிட்ஸ் மழலையர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர்.