புதுக்கோட்டை  மாவட்ட இந்திய ரெட் கிராஸ் சார்பில் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை  மாவட்ட இந்திய ரெட் கிராஸ் மற்றும் புதுக்கோட்டை முத்துமீனாட்சி  மருத்துவமனையும் இணைந்து  குன்னண்றார்கோவில் ஒன்றியம் வைத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.  பல்வேறு நோய்களுக்கான பொது மருத்துவ  பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.  தொடர்ந்து தொடர் சிகிச்சை  தேவையானவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்த முகாமில் 150 க்கு மேற்பட்டோர்  பங்கு பெற்று பயனடைந்தனர்.  இதுபோன்ற முகாம்களை தொடர்ந்து நடத்திடுமாறு பொதுமக்கள் முகாம் ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டனர். 

முகாமில்  முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சரவணன், அகில், புவனேஸ்வரி மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர்டாக்டர்  முத்து மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் வெள்ளைச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் தீபா நாகராஜன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன்  டாக்டர் ராமதாஸ், துணைத் தலைவர் ஜி எஸ் தணபதி, பொருளாளர் மத்தியாஸ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், ஊராட்சி உறுப்பினர் நாகராஜ் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.