புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக பழவகை மரக்கன்று நடும் விழா

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சாந்தார் அம்மன் கோவில் ஆஞ்சநேயர் சன்னதி வளாகத்தில் பறவைகளுக்கு பயன் தரும் விதத்தில் பழவகை மரக்கன்று நடும் விழா சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் மேலாண்மைச் செயலாளர் கண.மோகன்ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் மல்லிகா வெங்கட்ராமன், மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா, துணை ஆளுநர் ஆர்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மேனாள் நகர்மன்ற துணைத் தலைவரும், 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான எஸ்.ஏ.எஸ்.சேட் என்ற அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் விழாவினை துவக்கி வைத்தார். மேனாள் தலைவர் ஆர்.சிவக்குமார் சங்கச் செயலாளர் முத்தன் அரசகுமார், வருங்கால தலைவர் வி.அர்.எம்.தங்கராஜ், உறுப்பினர்கள் பி.குணசேகரன், கே.என்.செல்வரத்தினம், ராமகிருஷ்ணன், டி.தயாளன், எஸ்.நாகரத்தினம், பி.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்க பொருளாளர் ஆர்.சங்கர் நன்றி கூறினார்.