புதுக்கோட்டை காந்தி பூங்கா மீட்பு குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது

புதுக்கோட்டை காந்தி பூங்கா மீட்பு,  பாராளுமன்ற தொகுதி மீட்பு மற்றும் புதுக்கோட்டை  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும்  பல்வேறு முறைகேடுகளை கண்டித்து  தொடர் உண்ணாவிரத புதுக்கோட்டையில் நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை காந்தி பூங்கா வாயிலில்  அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல பேரவை சார்பில்  நடைபெற்று வரும்  இந்த  தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளோர்  காந்தி பூங்கா  சமீப காலமாக  தனியார் நபர்களின்  கட்டுப்பாட்டில் உள்ளது என்றும்  இதனால்  காந்தி பூங்காவின் நோக்கம் சீர்கெடுவதாகவும்  அதேபோல் பாராளுமன்ற தொகுதி  பறிபோயி புதுக்கோட்டை மாவட்டம் பரிதவித்து எந்த வளர்ச்சி திட்டமும் இல்லாமல் இருப்பதாகவும்  போராட்டத்தை முன்னெடுத்துள்ள  தினகரன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரத  போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல்  உள்ள நிலையில்  தாங்கள் கூட கூடாது போராட்டம் நடத்தக் கூடாது என்று  காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்து  போராட்டத்திற்கு  கொண்டுவரப்பட்ட  மைக் செட் உள்ளிட்ட பொருட்களை  வாகனத்திலேயே அனுப்பி வைத்தனர்  இதனால் அங்கு சலசலப்பு நிலவியுள்ளது.