
புதுக்கோட்டை யில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளாதல் சனிக்கிழமை அன்று மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ.சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், GH-பின்புரம், தெற்கு 4 ம் வீதி முருகன் கோயில் முதல் அண்ணா சிலை வரை , கீழராஜவீதி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர் , பாலாஜி நகர், சின்னப்பாநகர், நிஜாம் காலனி , சக்திநகர் , திருநகர் , திருவப்பூர் , திருக்கோகர்ணம் , திலகர் திடல் , செல்லப்பாநகர் அம்பாள் புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் 17.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.