புதுக்கோட்டையில் தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டையில்  தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அறிவியல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.அம்பிகாவதி ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் எ.கோவிந்தராஜன், மாநில பொருளாளர் பி.நாகராஜன் கலந்துகொண்டு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

தீர்மானம் 1 – உடனடியாக காலி  பணி இடங்களை நிரப்ப வேண்டும். தீர்மானம் 2 – சத்துணவு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தீர்மானம் 3 – ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஊழியர்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தீர்மானம் 4 – உணவு மானியம் உயர்த்தி வழங்க வேண்டும். தீர்மானம் 5 – ஒட்டுமொத்த ஓய்வூதியம் 5,000 ஆயிரம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் கரம்பக்குடி ஒன்றிய ராஜேந்திரன் நன்றி கூறினார்.