தேசிய கேரம் போட்டியில் வென்றவர்களுக்கு எம்.ஆர். கல்லூரி தாளாளர் சான்றிதழ்களும், பரிசும் வழங்கும் நிகழ்ச்சி

தேசிய கேரம் போட்டியில் வென்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை, எம்.ஆர். கல்லூரி தாளாளர் வழங்கினார்.

இந்திய அளவிலான 48வது ஆண்கள், பெண்கள், ஜீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மதுரை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக, அரியலூர் மாவட்ட கேரம் கழகத் தலைவரும், எம்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளருமாகிய எம்.ஆர்.இரகுநாதன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற கேரம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்திய கேரம் அசோசியேஷன் தேசிய பொதுச் செயலாளர் பாரதி நாராயண், நிர்வாக இயக்குனர் அதுல் மெக்ரா, தமிழ்நாடு கேரம் கழகத்தலைவர் நாசர்கான்,  தமிழ்நாடு செயலாளர் அர்ஜூனா விருது பெற்ற மரிய இருதயம், மதுரை கேரம் சங்கத்தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திகேயன்,  எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி முதல்வர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.