தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட கால்நடைத்துறை சார்பாக வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் பொன்வேல் அறிவுரையின்படியும், தென்காசி கோட்ட கால்நடை உதவி இயக்குநர் உமா மகேஷ்வரி,கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் ரஹ்மான், நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன்,சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சக்திவேல்,கால்நடை மருத்துவர் இம்தியாஸ், மருத்துவர் சிவகுமார், கடையநல்லூர் அரசு கால்நடை மருத்துவர் எம்.அசன் காசிம்,கால்நடை ஆய்வாளர் ஹாஜிரா, மருத்துவ உதவியாளர் ஆறுமுகம், கடையநல்லூர் கிராம உதவியாளர் செந்தமிழ் செல்வன்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்களாதுரை,சண்முகசுந்தரம்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தென்காசி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க காப்புரிமை உறுப்பினர் , சமூக ஆர்வலர் தியாகராஜன்,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.