திருமயம் அரசு மருத்துவமனைக்கு முத்து மீனாட்சி மருத்துவமனை சார்பாக 1.5 லட்சம் மதிப்பீட்டில் மொபைல் எக்ஸ்ரே திறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் மொபைல் எக்ஸ்ரே திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்  கிருஷ்ணமூர்த்தி முயற்சியில், அரண்மனைபட்டி கணபதி அழைப்பை ஏற்று முத்து மீனாட்சி மருத்துவமனை தலைமை மருத்துவர் கே.பெரியசாமி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 1.5 லட்சம் மதிப்பீட்டில் உள்ள மொபைல் எக்ஸ்ரேயை திறந்து வைத்தார். இது மாதிரியான சமூக பணிகளை முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் திறம்பட செய்து வருகிறது.

இவ்விழாவில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள், மருந்து விநியோகஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பார்த்து தெரிந்தவுடன் மகிழ்ச்சியுற்றனர். இது மாதிரியான சமூக பணிகளை செய்த முத்து மீனாட்சி நிர்வாகத்திற்கு திருமயம் அரசு மருத்துவமனை நிர்வாகம் நன்றியினை தெரிவித்துக் கொண்டது.