திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம்

அருப்புக்கோட்டை அருகில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் திருச்சுழி அருகே  ம.ரெட்டியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றியகுழு பெருந்தலைவர் பொன்னுத்தம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் மூக்கையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் திறம்பட பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி மற்றும் இளநிலை உதவியாளர் காளிமுத்து ஆகிய இருவருக்கும் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கியதையொட்டி, ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி மற்றும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர்.  இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சந்தனபாண்டி, நரசிங்கபெருமாள், நாகஜோதி தொல்காப்பியம், அன்னலெட்சுமி கருப்பசாமி, காளீஸ்வரி, காமிலாபர்வின் ரீயாதீன், கூடலிங்கம் உள்பட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.