திருச்சியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் எம்.ஆர். கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் எம்.ஆர். கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இது பற்றி கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திருச்சியில் நடைபெற்ற “நுண்ணுயிரியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள்” என்ற தலைப்பில்,  மூன்றாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்துள்ள, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையைச் சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியைகள்
சுவரொட்டி விளக்கக்காட்சி மற்றும் வாய்வழி காகித விளக்கக்காட்சி நிகழ்வுகளில் பங்குபெற்று, பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளனர்.

பங்குபெற்ற மாணவியர்களை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர். இரகுநாதன், மற்றும் இயக்குநர் முனைவர் இரா.இராஜமாணிக்கம் ஆகியோர்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.