தினையாகுடி – திருநெல்லிவயல் கிராமத்தில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தினையாகுடி – திருநெல்லிவயல் கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

நடுமாடு, சின்னமாடு என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. பந்தைய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. பந்தைய நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.