தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் புதுக்கோட்டையில் இன்று அனுசரிக்கப்பட்டது

பேரறிஞர் அண்ணா  செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்து  பிப்ரவரி  3ல் மறைந்தார்  அவரது மறைந்த நாளை ஒட்டி  திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்  அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை அண்ணா சிலையில் உள்ள  பெருந்தகை  திருவுருவு சிலைக்கு திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து  வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், நகர திமுக செயலாளர்  செந்தில்,  உள்ளிட்டோர்  பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதேபோல் நெல்லுமண்டி தெருவில் உள்ள  ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட  அலுவலகத்தில்  அவரது  ஆதரவாளர்கள்  மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில்  அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.  அண்ணா சிலையில் உள்ள  பேரறிஞகர் சிலைக்கு  அதிமுக சார்பில் நகர செயலாளர்கள் பாஸ்கர்,  சேட்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அதேபோல் அமமுக, மதிமுக,தேமுதிக சார்பிலும்  பல்வேறு அமைப்புகள் சார்பிலும்  மாலை அணிவித்து  பேரறிஞரின்  நினைவை போற்றி வணங்கினர்.