தமிழகம், புதுச்சேரி கடல் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுaக்குள் செல்லக் கூடாது என்றும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − 61 =