தமிழகத்தில் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 20 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 26,16,381 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,16,381 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,719 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,64,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,941 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 177 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,44,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,24,72,641 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,54,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16,620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 15,27,742 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 858 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,88,601 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 651
 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.