சென்னை ஐகோர்ட் 6 நுழைவு வாசல்கள் இன்றிரவு மூடல்: வக்கீல்கள், மக்கள் செல்ல தடை

சென்னை ஐகோர்ட், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமாகும். இது தற்போது வரை அதன் பழைமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் உயர்நீதிமன்றத்தை கட்டியதால் அதற்கு மரியாதை செய்யும் வகையிலும், மேலும் இது பொதுச்சொத்து அல்ல என்பதை வலியுறுத்தும் வகையிலும் ஆண்டுக்கு ஒருமுறை அதன் நுழைவு வாசல்கள் பூட்டப்படுகின்றன.

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயத்தை சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் நவ.19ம் தேதி இன்றிரவு 8 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை ஒருநாள் முழுவதும் மூடப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை ஐகோர்ட் பதிவாளர் ஹரி வெளியிட்டார். நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் போது வக்கீல்கள் மற்றும் மக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.

இதற்காக அனைத்து வாயில்கள் முன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.