இன்றைய சூழலில் சிறுபான்மையினர் நலனை நாம் அனைவரும் கருத்தில் கொண்டு அக்கறை செலுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய “ஊறும் வரலாறு” புத்தகத்தின் அறிமுக விழா இன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது, இதில் ஏற்புரையாற்றிய நந்தலாலா பேசினார்.
விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார், செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார், மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார், ரமா.ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர், முன்னதாக கபார்க்கான் வரவேற்க, மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார், சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.