சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு   உறுப்பினர்களாக  வக்கீல் சண்முகையா, முப்பிடாதி, முத்துலட்சுமி, ராமகிருஷ்ணன் வெள்ளைச்சாமி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகையா பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணைய பொறுப்பு வெங்கடேஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக மூத்த வழக்கறிஞர் சண்முகையா பதவி ஏற்று கொண்டார். இதில்  சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசை பாண்டியன், மாவட்ட அறங்காவலர்குழு உறுப்பினர் நாராயணன், திமுக நகர செயலாளர் பிரகாஷ், வக்கீல்கள் சந்தன பாண்டியன், அன்புச்செல்வன், மருதுபாண்டி மற்றும் சண்முகராஜ் சோமசெல்வ பாண்டியன், துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.