
கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால் ஒன்றிய அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற ஒன்றிய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஐந்து நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான ஹிமாச்சலுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்து பேட்டி அளித்த அவர், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார். மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு ரூ.23,123 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தகவல் கூறினார்.
கொரோனா முதல் இரண்டு அலையில் பெரியவர்களை பாதித்தது போல, மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால் ஒன்றிய அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.