
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை இன்று ஏற்றுக்கொண்டனர்.
தந்தை பெரியார் என போற்றப்படும் ஈ.வே.இராமசாமியை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் நாளை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என சட்டவிதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, செப்டம்பர் 17-ம் நாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது, உறுதிமொழி நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.