கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயிலில் சமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா வெங்கடாஜலபதி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சமபந்தி விருந்தில், தமிழக ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் மா.சட்டநாதன், நிர்வாக அலுவலர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.