கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு யேகோவா நிசி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி தலைமை தாங்கினார்.  சிலட்டூர் அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் வி.கோவிந்தராஜன் மற்றும் அறந்தாங்கி ஆண்டோ பிரவின், கே,ஆர்,புரம் கலாநிதி, கட்டுமாவடி கேடிஎஸ் காந்தி கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பார்வையிட்டு  மதிப்புரை வழங்கி மாணவர்களை ஊக்கப்படித்தினார்கள். பேராவூரணி கலைச்செல்வன் விண்வெளி அறிவியல் செயல்முறை கல்வியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் செயல்முறை மூலம் விளக்கமளித்து பேசினார். அறிவியல் கண்காட்சியை பெற்றோர்கள், அருகிலுள்ள பள்ளி மாணவர்கள் கண்டு மகிழ்ந்தார்கள். முடிவில் யேகோவா நிசி பள்ளி தாளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார்.