ஓய்வூதியர் சங்கத்தின் ஸ்தாபக தினம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க ஸ்தாபக தினத்தையொட்டு இன்று புதுக்கோட்டையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக் கட்டிட வளாகத்தில் சங்கத்தின் கொடியை மாவட்டத் தலைவர் மு.முத்தை ஏற்றி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பிரதாப்சிங், என்.ராமச்சந்திரன், கி.ஜெயபாலன், ஆர்.சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.