உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அரிமா சங்கம் சார்பில் புத்தகங்கள் வழங்கும் விழா

உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அரிமா சங்கம் சார்பில் ரூ. 10,149 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இது பற்றி ஆண்டிமடம் விளந்தை அரிமா சங்க நிர்வாகி ராஜேந்திரன் வெளியிட்ட செய்தி குறிப்பு: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, உட்கோட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு,  ரூ. 10,149 மதிப்புள்ள 165 புத்தகங்களை,  பன்னாட்டு அரிமா சங்கத்தின் மண்டலம் 10 – “எழில் மொழி” மண்டல மாநாட்டினை சிறப்பாக நடத்திய லயன்  ராஜேந்திரன்   வழங்கினார்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும், முதல் உதவி என்ற நூலையும் வழங்கினார். அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்தார். தான் பயின்ற பள்ளிக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக இதை கருதி செய்த இவ்விழாவில், தலைமை ஆசிரியர் தலைமை ஏற்க, அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் லயன்ஸ் சண்முகம் கலந்துகொண்டு,  சிறப்புரை ஆற்றினார். லயன் கோதண்டராமன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். பள்ளி தமிழாசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூற மாணவர்கள் முன்னிலையில் விழா இனிமையாக நடைபெற்றது.