
ஈமு கோழி மோசடி விவகாரத்தில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2014ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் மற்றும் தமிழ்நேசன், வாசு ஆகியோர் ஈமு கோழி வளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி, அதில் 121 முதலீட்டாளர்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.