இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் : ராமேஸ்வர மீனவர்கள் திட்டம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தாக்குவது, சிறைபிடித்து போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. அண்மை காலமாக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிப்.4ம் தேதி ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க சென்ற 2 படகுகள், 23 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இதையடுத்து நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் நீதிபதிகள் விடுதலை செய்தனர். மேலும், இருவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு மட்டும் இருமுறை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 23, 24ம் தேதி நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். படகுகளை இலங்கை நாட்டுடைமை ஆக்குவதற்கும், மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.