இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்  லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுவேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியின் சார்பில் பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் அகில இந்திய விவசாயிகள் மகாசபை, ஏஐசிசி, டியு மற்றும் பெண்கள் கழகம் ஆகியவை கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்தை அதானி, அம்பானியிடம் ஒப்படைக்காதே, 100 நாள் வேலைத்திட்டத்தை சிதைக்காதே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், 2024 இல் மோடி  ஆட்சியை தோற்கடிப்போம்,  பத்தாண்டு கால துரோக பிஜேபி ஆட்சிக்கு முடி கட்டுவோம் என கோசங்கள் எழுப்பப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 33 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோதிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வலத்தான், மாநில செயலாளர் ரேவதி, மாநில குழு உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.