அறந்தாங்கி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 22 வயது இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணம் பெருகுடியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து கிரிஸ்டோபரை போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா கிறிஸ்டோபர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் 61 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே 75 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நிலையில் மேலும் 25 ஆயிரம் ரூபாய் நிவாரண வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளி கிறிஸ்டோபர் காவல்துறையினரின் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்தனர்.