
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆலங்குடி கண்மாயிலிருந்து தற்போதைய விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலங்குடி நீர்பாசன சங்க தலைவர் ராமசாமி மற்றும் வெட்டிவயல் நீர்ப்பாசன சங்க தலைவர் கலாவதி இளங்கோவன் தலைமையில் ஆலங்குடி கண்மாய் பாசன மடை திறக்கப்பட்டது.
விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு பூஜைக்கு பின் திறக்கப்பட்ட பாசன மடை தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். பாசன மடையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அந்தப்பகுதியில் தூர்வாரப்பட்ட வாய்க்கால்கள் மூலம் வயல் பகுதிக்கு சீறிப்பாய்ந்தன.
நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் வினோத், நீர்வளத் துறையினர் நாடிமுத்து, பணி ஆய்வாளர் வெங்கடேசன், உறுப்பினர்கள் இளங்கோவன், வெள்ளைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார், கண்ணன், காமராஜ், முருகேசன், ராசு, கோபால், ரவி, காளிமுத்து, கலா, கருப்பையா, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.