Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக...
Homeஅரசியல்வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் : போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் : போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் – முக.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் முக.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘3 வேளாண் சட்டங்களும் அழிக்கக் கூடியது. சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல. எனவே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து 3 சட்டங்களில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. 3 சட்டங்களையும் முழுமையாக எதிர்க்கிறோம். வேளாண் சட்டங்கள் தனியாருக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு விரோதமாகவும் உள்ளன என்றார்.

முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, மமக உள்ளிட்டவை ஆதரவளித்த நிலையில், அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

முன்னதாக ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x
error: Content is protected !!
%d bloggers like this: