விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள், ஆன்லைனில் மதுபான விற்பனை இல்லை:அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்  பின்வருமாறு, எந்த நிலையிலும் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை இல்லை.டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 500 தொகுப்பு ஊதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ரூ . 500 தொகுப்பு ஊதியம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.15.01 லட்சம் கூடுதல் செலவாகும்.

பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அமைக்கப்படும். உடன்குடி விரிவாக்க திட்டம் -2,3 அனல் மின் உற்பத்தி திட்டங்களை செயலாக்கத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 1979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்களை நிறுவ திட்டம். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். வடசென்னையில் 2 லட்சத்து 38 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடியில் 71,000 டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பம், வர்த்தக ரீதியிலான அடிப்படையில் சூரிய மின் சக்தி பூங்கா நிறுவப்படும். 4000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், 2000 மெகாவாட் சேமிப்பு திட்டத்துடன் நிறுவப்படும். சென்னை மாநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகர பகுதிகளில் மேல்நிலை மின்பாதைகளை புதை வடங்களாக மாற்றப்படும். ரூ. 12.5 கோடி மதிப்பீட்டில் 110 கிலோ வாட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தல். ரூ. 679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன் மேம்படுத்துதல். ரூ.50கோடி மதிப்பீட்டில் வடசென்னை அனல் மின் நிலையம்   2ல் உலர் சாம்பலை வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்படும். ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் 159 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − 81 =