வடமாநிலத்தவர்கள் இல்லாவிட்டால் கட்டுமான தொழில் முடங்கும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்டுமான தொழிலாளர் சங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடமாநில தொழிலாளர்கள் இல்லையென்றால் சிமெண்ட் கவர் தயாரிப்பு பாதிக்கப்படும். தமிழ்நாடு வளர்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தொழில் முடங்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு வடமாநிலத்தவர்கள் தேவை. எனவே வடமாநிலத்தவர்கள் தொடர்பாக வதந்தி பரப்பாதீர்கள் என தெரிவித்திருக்கிறது.