
அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன்(80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இதனைத்தொடர்ந்து இவரின் உடல் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக 14 வயதில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கிய மதுசூதனன், பின்னாளில் வடசென்னையில் மிகப்பெரும் அரசியல்வாதியாக உருவெடுத்தார். 1991ல் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக பதவிவகித்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்து வந்தவர் மதுசூதனன். 2017ல் அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஓபிஎஸ்.க்கு ஆதரவாக நின்றவர் நிலையில், இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இருந்தபோது மதுசூதனனிடமே கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.
மேலும் ‘மதுசூதனன் இருக்கும்வரை அவர்தான் அதிமுகவின் அவைத் தலைவர்’ என ஜெயலலிதா அறிவித்தது கடைசிவரை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது மரணம் அதிமுகவிற்கு பேரிழப்பை ஏற்படுத்தி, தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.