மாநிலப் பட்டியலில் 34-வது பிரிவின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றக்கூடிய உரிமை மாநில அரசுக்கு உண்டு – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

மாநிலப் பட்டியலில் 34-வது பிரிவின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றக்கூடிய உரிமை மாநில அரசுக்கு உண்டு,வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக ஆன்லைன் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்  என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

இணையவழி சூதாட்டத்திற்காக சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டமுன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார், அது வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுவது குறித்து, நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கேன், ஆளுநர் இதனை மத்திய பட்டியல் 31 என கூறி இருக்கிறார், ஆனால் இணையவழி சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் மாநில பட்டியல் 34-யில் வருவதால் இது குறித்து சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு.  இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். மீண்டும் ஒரு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் உயர்நீதிமன்றமே அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கும்,

நாங்கள் இந்திய திருநாட்டிற்கு முன்மாதிரியான ஒரு சட்டமாக, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சட்டமாக இணையவழி சூதாட்டத்தை ஒழிக்க கூடிய சட்டமாகவும், இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்குமான சட்டமாக எல்லா சட்ட வல்லுனர்களோடும் கலந்து ஆலோசித்து, சட்ட முன் வரைவு  தயாரித்து தாக்கல் செய்தோம். ஆளுநர் ஒரு முறை தான் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார், ஏற்கனவே விளக்கம் கேட்டார் விளக்கம் கொடுத்து உள்ளோம் மீண்டும் இரண்டாவது முறையாக சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம்.

சட்டப்படி நாங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதெல்லாம் எடுத்துள்ளோம் என்பது இருக்கின்ற அனைவருக்கும் தெரியும். உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. இதை இந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,

ஆளுநருக்கு நேரமே இல்லை, அவர் எல்லா ஊர்களுக்கும் போயிட்டு வருகிறார். பாஜகவினரை சந்தித்து வருகிறார், மாற்றுக்கருதுடையவர்களையும் சந்தித்து வருகிறார். அதனால் அவருக்கு இதுபோன்ற கோப்புகளை பார்ப்பதற்கு நேரமில்லை என்று நான் கருதுகிறேன் என்றும் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 − = 28