மன்னர்கள் அறக்கட்டளை சார்பாக நலத்திட்டங்கள் தொடக்கம்!!!

மன்னர்கள் அறக்கட்டளை சார்பாக சேலம் பஸ் நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் தொடங்கப்பட்டது.

மன்னர்கள் அறக்கட்டளை சார்பாக சேலம் புதிய பஸ்நிலையம் பூமாலை வணிக வளாகத்தில் முதியோர்களுக்கு தினம் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம், விதவை, கைம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களை அறக்கட்டளையின் பொதுச் செயளாளர் ஜூபிடர் மகேஷ்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடன் மாநில துணைத் தலைவர் சுப்ரமணி, மேற்கு மண்டல மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா, விவசாய அணி அமைப்பாளர் சீனிவாசன் , காடையாம்பட்டி ஒன்றியச் செயலாளர் தமிழரசு ,தரும்புரி மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலக்ஷ்மி, இளைஞரணி செயலாளர் கீரத்திவாசன், விருதுநகர் தனபாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: