டில்லியில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மெத்தனம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் தெற்கு வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக வடக்கு மாவட்ட தலைவர் சீனி முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இப்னு முன்னிலை வகித்தார். ம.ம.க., மாவட்ட செயலாளர் அப்பாஸ், பொருளாளர் கஜினிமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் முகமதுகவுஸ் கோஷங்களை எழுப்பினார். மாநில செயலாளர் அப்துல்காதர் மர்பஈ, மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் லியாக்கத் அலி, சிபிஎம் மாவட்ட செயலாளர் விஜயராகவன், இஸ்லாமிய அமைப்பாளர் அய்யூப் அலி பைஜி, சாகுல்ஹமீது, மாலின், அப்துல்ரபி,அகமது அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Next article
Similar Articles
“கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” அண்ணாமலை
“கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட முயற்சித்தால், நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேகேதாட்டு நோக்கி நடைபயணம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர்...
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மீனாட்சியம்மன்கோவில் வைகாசி மாதத் திருவிழா
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத ஸ்ரீ சொக்கலிங்க சுவாமி கோவிலின் வைகாசி மாத பிரமோற்சவ திருவிழாவும், கொடியேற்று திருவிழாவும் செங்குந்த முதலியார் சமுதாயத்தினரால் 24.5.2023அன்று தொடங்கி ஒன்பது நாட்கள் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை வெவ்வேறு சமுதாயத்தினரால், மண்டகப்படி தாரர்களால் கொண்டாடப்பட்டது.
முதலாவது நாள் இல்லத்தார் சமுதாயம்,இரண்டாம் நாள் யாதவ சமுதாயம், மூன்றாம் நாள் வணிக வைசியர் சமுதாயம், நான்காம் நாள் சைவ வேளாளர் சமுதாயம், ஐந்தாம் நாள் சேனைத்தலைவர் சமுதாயம், ஆறாம் நாள் யோகீஸ்வர சமுதாயம்,ஏழாம் நாள் விஸ்வ குல சமுதாயம்,எட்டாம் நாள் செங்குந்தர் சமுதாயமும், ஒன்பதாம் நாள் அனைத்து சமுதாயமும் சேர்ந்து சுவாமி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்,இதில் புளியங்குடி நகர் மன்றத் தலைவி விஜயா சௌந்தர பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவரும் திமுக நகரச் செயலாளருமான எ.அந்தோணிசாமி பொதுமக்களுடன் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சித்துராஜ், பண்டாரம், ராஜவேல் பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர் கார்த்திக், ஞான பண்டிதன் இந்து சமய அறநிலை துறை சார்பாக கே. சாலை லட்சுமி தக்கார், வா. சரவணகுமார் ஆய்வாளர், அ.ர. ஸ்ரீதேவி நிர்வாக அதிகாரி, புளியங்குடி காவல்துறை ஆய்வாளர் மற்றும் சமூக நல்லிணக்க தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இவ்விழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர், திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் வள்ளலார் தொண்டு நிறுவனம் சார்பாக அறுசுவை உணவு தண்ணீர் வழங்கி சிறப்பித்தனர்.