மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கினால், அந்த வாகனம் இயங்க முடியாத அளவிற்கு நவீன தலைக்கவசத்தை திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று பெரும்பாலான வாகன விபத்துகளுக்கும், உயிரிழப்புக்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குவது தான். இவற்றைத் தடுக்கும் வகையில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், கார்த்திகேயன், சந்தோஷ் ஆகியோர் ஒன்றிணைந்து புதுவகை நவீன தலைக்கவசத்தை வடிவமத்துள்ளனர். இந்த நவீன தலைக்கவசத்தை அணிந்திருக்கும் போது மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கினால் அந்த வானகம் இயங்காது. இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழாது.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு சென்னை, தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான நவீன கண்டுபிடிப்பு சாதங்களுக்கான போட்டியில் இடம்பெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், கார்த்திகேயன், சந்தோஷ் ஆகியோர் ஒன்றிணைந்து வடிவமைத்துள்ள நவீன தலைக்கவசம் மாநில அளவில் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது
போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், செயலாளர் விஸ்வநாதன், முதல்வர் முத்துராமு, துறைத்தலைவர் சொர்ணலதா மற்றும் அனைத்துப் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.