தூங்கா நகரை தூய்மை நகராக்குவோம் என்பதை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மற்றும் திருநகர் சி.எஸ்.ஆர்.ராமாச்சாரி நினைவு உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சைக்கிள் பேரணி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நடைபெற்றது. பேரணியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்சித்ஜிங் காலோன் ஆகியோர் தொடங்கி வைத்தனர், பேரணி ஜான்சிராணி பூங்காவில் தொடங்கி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விளக்கத்தூன் காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, பேரணி ஏற்பாடுகளை திருநகர் சி.எஸ்.ஆர்.ராமாச்சாரி நினைவு பள்ளி ஆசிரியை பூர்ணிமா வெங்கடேஷ், விஷ்வாடுகாத்தி செய்திருந்தனர்.
இதில் உதவி ஆணையாளர் மனோகரன், நகர்நல அலுவலர் வினோத்குமார், சுகாதார அலுவலர்கள் வீரன், கோபால் மற்றும் தன்னார்வலர் வினோத் நாகராஜன், திருநகர் அடைக்கலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.