மண்ணையும் மக்களையும் பாதுகாக்க சீனா எந்த எல்லைக்கும் செல்லும் – அதிபர் ஜி ஜின்பிங்

சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக ராணுவத்தை அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். உறுப்பினர்களின் கைத்தட்டலுக்கு நடுவே பேசிய அவர், தன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் தன்னை அடுத்தடுத்த இலக்கை நோக்கி நகர்த்துகிறது என்று தெரிவித்தார்.

 நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேம்பட்டு வருவதாக கூறிய அவர், ராணுவத்தில் அதி நவீன போர் வாகனங்கள், விமானங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை உற்பத்தி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் நாட்டின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக ராணுவத்தை அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன் என்றும் சீனாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் எடுத்துரைத்தார். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என்றும் சீன அதிபர் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − = 27