பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றம் 16-வது நாளாக இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.