பூமியில் இங்கு சென்றால் மனிதர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் – எந்த இடம் தெரியுமா?

இங்கு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழக்க நேரிடும். எலும்பின் சாம்பல் கூட மிஞ்சாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பூமியில் சில இடங்களில் வெப்பமும், சில இடங்களில் பனி மூட்டமும் இருக்கும். அண்டார்டிகா போன்ற இடங்களில் வெப்பநிலை மைனஸ்100 டிகிரி செல்சியஸ் வரை கூட செல்கிறது. ஆனால் பூமியில் சூரியனின் வெப்பநிலைக்கு சமமான ஒரு இடம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

யாராவது நடந்து சென்றால், அவர் ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகிவிடுவார். எலும்புகள் கூட கிடைக்காது. இன்று வரை எந்த நாடும் விஞ்ஞானியும் அங்கு செல்ல முடியவில்லை. பூமியில் இந்த இடத்தின் வெப்பநிலையை அளவிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் விஞ்ஞானிகள் தோல்வியடைந்தனர்.

பூமியின் மேற்பரப்பில் ஆழமாகச் செல்லும்போது வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1992 இல், ரஷ்யா பூமியின் ஆழமான குழியை தோண்ட முயன்றது. ஆனால் 12,200 மீட்டர் ஆழத்தை எட்டிய பிறகு, அங்கு வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸை எட்டியதால் அகழாய்வை விஞ்ஞானிகள் நிறுத்தினர்.

அந்த நேரத்தில் பூமியில் துளையை ஏற்படுத்தி ரஷ்யாவால் பூமியின் 7 அடுக்குகளில் ஒன்றில் 4 இல் ஒரு பகுதியைக் கூட கடக்க முடியவில்லை. இன்னும் ஆழத்திற்கு சென்றால் வெப்பநிலை எவ்வளவு அதிகரித்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

சயின்ஸ் இதழின் அறிக்கையின்படி, இன்றுவரை சூரியனின் வெப்பநிலையை யாராலும் அளவிட முடியவில்லை. ஆனால் சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படியென்றால் பூமியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடம் உண்டா? என்ற கேள்விக்கு பதில்இருக்கிறது. பூமியின் மையப் பகுதியில் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழக்க நேரிடும். எலும்பின் சாம்பல் கூட மிஞ்சாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.