
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முதல்வர் சுகந்தி ஆலோசனையின்படி இயற்கையை காப்போம் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாமை புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடக்கும் வாரசந்தைபகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் வரலாற்று துறை ஆங்கில வழியை சேர்ந்த சுமார் 75 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாமில் இதில் நெகிழிப் பைகளை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று வாரசந்தையில் காய்கறிவியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாணவியர் மஞ்சப் பை வழங்கி நெகிழிப் பை விழிப்புணர்வு பற்றி வலியுறுத்தினார்கள். இதில் துறை பேராசிரியர்கள் ஜோதி மற்றும் தனலட்சுமி, வரலாற்று துறை தலைவர் காயத்ரி தேவி மற்றும் மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.