8 மணிக்குப் பதிலாக 12 மணி என வேலை நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார், மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி சி.மாரிக்கண்ணு, கே.ரெத்தினவேல், ரேவதி, சித்தையன், சரவணன், செல்வி, மாணிக்கம், முருகதாஸ் உள்ளிட்டோர் பேசினர், ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில் 12 மணி வேலை நேரம் தொழிற்சாலைகள் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
