புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த யோகேஸ்வரி என்ற மாணவி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கில் ஆப்ரேஷன் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாணவி யோகேஸ்வரி இன்று பொதுத்தேர்வினை எழுத புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வரைக்கு தாமதமாக வந்தார்.

மாணவி தேர்விற்கு தாமதமாக வந்த போதும் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்ட தேர்வு அலுவலர்கள் அவரை தேர்வு எழுத அனுமதித்தனர்.