புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார். மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார். இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கோர்ட்டில் அவதூறு வழக்கு- அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல்
Similar Articles
“கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்” அண்ணாமலை
“கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட முயற்சித்தால், நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேகேதாட்டு நோக்கி நடைபயணம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர்...
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மீனாட்சியம்மன்கோவில் வைகாசி மாதத் திருவிழா
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத ஸ்ரீ சொக்கலிங்க சுவாமி கோவிலின் வைகாசி மாத பிரமோற்சவ திருவிழாவும், கொடியேற்று திருவிழாவும் செங்குந்த முதலியார் சமுதாயத்தினரால் 24.5.2023அன்று தொடங்கி ஒன்பது நாட்கள் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை வெவ்வேறு சமுதாயத்தினரால், மண்டகப்படி தாரர்களால் கொண்டாடப்பட்டது.
முதலாவது நாள் இல்லத்தார் சமுதாயம்,இரண்டாம் நாள் யாதவ சமுதாயம், மூன்றாம் நாள் வணிக வைசியர் சமுதாயம், நான்காம் நாள் சைவ வேளாளர் சமுதாயம், ஐந்தாம் நாள் சேனைத்தலைவர் சமுதாயம், ஆறாம் நாள் யோகீஸ்வர சமுதாயம்,ஏழாம் நாள் விஸ்வ குல சமுதாயம்,எட்டாம் நாள் செங்குந்தர் சமுதாயமும், ஒன்பதாம் நாள் அனைத்து சமுதாயமும் சேர்ந்து சுவாமி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்,இதில் புளியங்குடி நகர் மன்றத் தலைவி விஜயா சௌந்தர பாண்டியன், நகர் மன்ற துணைத் தலைவரும் திமுக நகரச் செயலாளருமான எ.அந்தோணிசாமி பொதுமக்களுடன் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சித்துராஜ், பண்டாரம், ராஜவேல் பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர் கார்த்திக், ஞான பண்டிதன் இந்து சமய அறநிலை துறை சார்பாக கே. சாலை லட்சுமி தக்கார், வா. சரவணகுமார் ஆய்வாளர், அ.ர. ஸ்ரீதேவி நிர்வாக அதிகாரி, புளியங்குடி காவல்துறை ஆய்வாளர் மற்றும் சமூக நல்லிணக்க தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இவ்விழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர், திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் வள்ளலார் தொண்டு நிறுவனம் சார்பாக அறுசுவை உணவு தண்ணீர் வழங்கி சிறப்பித்தனர்.