நீட் மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!!!

நீட் மசோதா சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. பாஜக இம்மசோதாவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பொது மக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துக்களை கேட்டுப் பெற்றது.  இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு  14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. 

இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று காலை மசோதாவை முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீதான் விவாதம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

இதற்கிடையே, நீட் தேர்வால் பல நன்மைகள் இருப்பதாக பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன், கூட்டணி கட்சிகளுக்கும், எங்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருப்பதாக கூறி பேரவையிலிருந்து வெளியேறினர். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் சட்ட மசோதா நிறைவேறியது. நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக  வெளிநடப்பு செய்தது.