
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வாக நீட் நுழைவுத் தேர்வை 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கிய நிலையில், ஆக.6ம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆக.10ம் தேதி இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.